சாக்கடை கழிவுகளை தெருக்களில் கொட்டி சென்ற மாநகராட்சி லாரி சிறைபிடிக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் இனிமேல் இது போன்ற தவறுகள் நடை பெறாது என்று வாக்குறுதி கொடுத்ததின் அடிப்படையில் அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கோவை: இன்று காலை கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சி லாரி சாக்கடை கழிவுகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.
அப்போது, லாரியின் பின்பக்கம் திறந்தபடி இருந்ததால், சாக்கடை கழிவுகள் கீழே வழிந்து ஓடியபடி தெருக்களில் சென்று கொண்டிருந்தது. இதனால், கடும் துர்நாற்றம் மற்றும் வாகன ஓட்டிகள் மீது கழிவுகள் சிதறியது.
இதனால், அந்த லாரியை செல்வதை பார்த்த அப்பகுதி PFI, SDPI நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அந்த லாரிகளை சிறைபிடித்து, சமந்தப்பட்டமாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து, அவற்றை நேரில் காண்பித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
பின்னர் அதிகாரிகள் இதுபோல மீண்டும் நடக்காது என நம்பிக்கை தெரிவித்ததின் பேரில் சிறைப்பிடித்தா லாரியை விடுவித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.