ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற மகன் கதவைத் தட்டி தாய், தந்தை இருவரையும் கெட்டவார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதால், வழக்குப் பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே தாய்-தந்தைக்குக் கொலைமிரட்டல் விடுத்த மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் மாகாளி வயது (73) கூலி தொழிலாளி. இவருக்கு செல்வராஜ் (43) என்ற மகனும், முத்துலட்சுமி (33) என்ற மகளும் உள்ளனர்.
செல்வராஜ் திருமணமாகி அதே ஊரில் வசித்து தேங்காய் பறிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். செல்வராஜுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் தினசரி குடித்துவிட்டு தந்தை மாகாளி மற்றும் தாய் சரசாள்(60) ஆகிய 2 பேரையும் அடிக்கடி கெட்ட வார்த்தையில் திட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தந்தை மாகாளி வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற செல்வராஜ் கதவைத் தட்டி தாய், தந்தை இருவரையும் கெட்டவார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தந்தை மாகாளி கொடுத்த புகாரின் பேரில் கிணத்துகடவு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த மகன் செல்வராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் மாகாளி வயது (73) கூலி தொழிலாளி. இவருக்கு செல்வராஜ் (43) என்ற மகனும், முத்துலட்சுமி (33) என்ற மகளும் உள்ளனர்.
செல்வராஜ் திருமணமாகி அதே ஊரில் வசித்து தேங்காய் பறிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். செல்வராஜுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் தினசரி குடித்துவிட்டு தந்தை மாகாளி மற்றும் தாய் சரசாள்(60) ஆகிய 2 பேரையும் அடிக்கடி கெட்ட வார்த்தையில் திட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தந்தை மாகாளி வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற செல்வராஜ் கதவைத் தட்டி தாய், தந்தை இருவரையும் கெட்டவார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தந்தை மாகாளி கொடுத்த புகாரின் பேரில் கிணத்துகடவு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த மகன் செல்வராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.