கிணத்துக்கடவில் நடந்த இருவேறு திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவில் இருவேறு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 59 ஆயிரத்து 600 ரொக்கப் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(30), இவர் பழைய செக்போஸ்ட் பகுதியில் பாத்திர கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு கடையைப் பூட்டிவிட்டு வழக்கம் போல் இன்று காலை கடையைத் திறக்க வந்த போது கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடைக்குள் சென்று பார்த்த அருண்குமார் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த 59-ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதேபோல் கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியில் சங்கரன்(42) என்பவர் மருந்துக் கடை நடத்தி வருகிறார்.
இவரும் இன்று காலை வழக்கம் போல் மருந்துக் கடையைத் திறக்க வந்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைந்த நிலையிலிருந்ததை கண்டு கடையைத் திறந்து பார்த்தபோது கல்லாப் பெட்டியிலிருந்த 600-ரூபாய் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இந்த இருவேறு திருட்டு சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் வந்து சோதனை செய்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(30), இவர் பழைய செக்போஸ்ட் பகுதியில் பாத்திர கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு கடையைப் பூட்டிவிட்டு வழக்கம் போல் இன்று காலை கடையைத் திறக்க வந்த போது கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடைக்குள் சென்று பார்த்த அருண்குமார் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த 59-ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதேபோல் கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியில் சங்கரன்(42) என்பவர் மருந்துக் கடை நடத்தி வருகிறார்.
இவரும் இன்று காலை வழக்கம் போல் மருந்துக் கடையைத் திறக்க வந்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைந்த நிலையிலிருந்ததை கண்டு கடையைத் திறந்து பார்த்தபோது கல்லாப் பெட்டியிலிருந்த 600-ரூபாய் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இந்த இருவேறு திருட்டு சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் வந்து சோதனை செய்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.