கோவை மாநகரில் சாலைகள் சீரமைப்பு, பூங்கா பராமரிப்பு உள்பட கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களில் ரூ.30-கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கோரப்பட்ட, கோரப்படாத பணிகள் மற்றும் துவங்கப்படாத 152-பணிகள், மாநகராட்சியின் தற்போதைய நிதிநிலையைக் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியில் நிதி நெருக்கடி காரணமாக ரூ.30-கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள தீர்மானங்களில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 86-வது வார்டில் உள்ள சில்லறை மீன் மார்க்கெட்டில் கழிப்பிடம் அமைத்தல், 98-வது வார்டு, மாரியப்ப கோனார் வீதியில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டுதல், 97-வது வார்டு, மோகன் நகர், 100-வது வார்டு ஈச்சனாரி பிரதான சாலையில் மெட்டல் சாலைகள் அமைத்தல், 59-வது வார்டு எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலணியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 2-ஆம் தளம் அமைத்தல், 34-வது வார்டு, வீரியம்பாளையம் ஆரம்பப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், 32-வது வார்டு, விளாங்குறிச்சி சாலை முதல் விஸ்வாசபுரம் வரையுள்ள கால்வாயில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூர்வாருதல், திடக்கழிவுகளை அகற்றுதல் மற்றும் மாநகரில் சாலைகள் சீரமைப்பு, பூங்கா பராமரிப்பு உள்பட கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களில் ரூ.30-கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கோரப்பட்ட, கோரப்படாத பணிகள் மற்றும் துவங்கப்படாத 152-பணிகள், மாநகராட்சியின் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள தீர்மானங்களில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 86-வது வார்டில் உள்ள சில்லறை மீன் மார்க்கெட்டில் கழிப்பிடம் அமைத்தல், 98-வது வார்டு, மாரியப்ப கோனார் வீதியில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டுதல், 97-வது வார்டு, மோகன் நகர், 100-வது வார்டு ஈச்சனாரி பிரதான சாலையில் மெட்டல் சாலைகள் அமைத்தல், 59-வது வார்டு எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலணியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 2-ஆம் தளம் அமைத்தல், 34-வது வார்டு, வீரியம்பாளையம் ஆரம்பப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், 32-வது வார்டு, விளாங்குறிச்சி சாலை முதல் விஸ்வாசபுரம் வரையுள்ள கால்வாயில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூர்வாருதல், திடக்கழிவுகளை அகற்றுதல் மற்றும் மாநகரில் சாலைகள் சீரமைப்பு, பூங்கா பராமரிப்பு உள்பட கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களில் ரூ.30-கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கோரப்பட்ட, கோரப்படாத பணிகள் மற்றும் துவங்கப்படாத 152-பணிகள், மாநகராட்சியின் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.