கோவை மத்திய மண்டல தூய்மைப்பணிகளை எம்.பி பி.ஆர். நடராஜன் துவக்கி வைத்தார்; மழைநீர் வடிகால்வாயைச் சரிசெய்யும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுகோள்!

கோவை மத்திய மண்டலத்தில் நடைபெற்றுவரும் தூய்மைப்பணிகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் துவக்கி வைத்தார். இதோடு மழைநீர் வடிகால்கால்வாயை சரிசெய்யும் பணிகளை துரிதப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் மாபெரும் தூய்மைப்பணி முகாம் நேற்று முதல் துவங்கியது.

இதில் மழைநீர் வடிகால்வாயைச்சுத்தம் செய்வது, கால்வாய் தூர்வாருவது போன்ற பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக கோவை மாநகராட்சியைப்பொறுத்தவரை 100 வார்டுகளில் நேற்று முதல் தூய்மைப்பணி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. இதன் மூலம் சுமார் 37 கிமீ தூரத்திற்கு சுத்தம் செய்யும் பணிகளில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.



இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 55க்கு உட்பட்ட லட்சுமி மில் எதிரில், மாபெரும் தூய்மைப்பணி முகாமை இன்று கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரும் பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அப்போது ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...