சிறுமுகை வனப்பகுதியில் புலி இறப்பிற்கானக் காரணம் குறித்து ஆய்வு நடைபெற்றுவருவதாகவும், விரைவில் என்ன காரணம் என்பது தெரிய வரும் என தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை சாய்பாபா காலணிப் பகுதிகளில் மாநகராட்சி சார்பின் மூலம் நடத்தப்படும் தூய்மைப்பணி முகாமை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவங்கி வைத்தார்.

இதனையடுத்துக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் குறைச்சொல்லமுடியாத அளவிற்கு திமுக அரசு ஆட்சி நடத்தி வருவதாக் கூறியுள்ளார். மேலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்பது வரவேற்கத்தக்க ஒன்று என தெரிவித்துள்ளார்.

இதோடு தமிழகம் முழுவதும் மழைக்காலத்திற்கு முன்னதாக அனைத்துப்பகுதிகளிலும் மழைநீர்க்கால்வாய் சீரமைக்கும் பணிகளை அந்தத்த மாநகராட்சிகள் மேற்கொண்டுவருவதாகக் கூறினார்.
மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தி வருவதாகவும், தமிழகத்திற்கு வாரம் 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதன் மூலம் விரைவில் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடும் பணி நிறைவடையும் என கூறியுள்ளார். இதோடு தமிழக வன எல்லைகளில் கான்கீரிட் சுவர் போடும் திட்டத்திற்கு மார்ச் மாதத்திற்கு பின்னர் நிதி ஒதுக்கப்படும் எனவும், இதன் மூலம் வனப்பகுதியை விட்டு யானை, பன்றி, மான்கள் போன்றவை குடியிருப்பு பகுதிக்குள் வரவாய்ப்பில்லை என கூறியுள்ளார். மேலும் கோவை மாவட்டம் சிறுமுகையில் புலி இறந்தது குறித்து ஆய்வு நடந்து வருகிறது என தெரிவித்த அமைச்சர், இறப்பிற்கான காரணம் ஆய்வின் முடிவில் தெரியவரும் என அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.
இதனையடுத்துக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் குறைச்சொல்லமுடியாத அளவிற்கு திமுக அரசு ஆட்சி நடத்தி வருவதாக் கூறியுள்ளார். மேலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்பது வரவேற்கத்தக்க ஒன்று என தெரிவித்துள்ளார்.
இதோடு தமிழகம் முழுவதும் மழைக்காலத்திற்கு முன்னதாக அனைத்துப்பகுதிகளிலும் மழைநீர்க்கால்வாய் சீரமைக்கும் பணிகளை அந்தத்த மாநகராட்சிகள் மேற்கொண்டுவருவதாகக் கூறினார்.
மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தி வருவதாகவும், தமிழகத்திற்கு வாரம் 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதன் மூலம் விரைவில் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடும் பணி நிறைவடையும் என கூறியுள்ளார். இதோடு தமிழக வன எல்லைகளில் கான்கீரிட் சுவர் போடும் திட்டத்திற்கு மார்ச் மாதத்திற்கு பின்னர் நிதி ஒதுக்கப்படும் எனவும், இதன் மூலம் வனப்பகுதியை விட்டு யானை, பன்றி, மான்கள் போன்றவை குடியிருப்பு பகுதிக்குள் வரவாய்ப்பில்லை என கூறியுள்ளார். மேலும் கோவை மாவட்டம் சிறுமுகையில் புலி இறந்தது குறித்து ஆய்வு நடந்து வருகிறது என தெரிவித்த அமைச்சர், இறப்பிற்கான காரணம் ஆய்வின் முடிவில் தெரியவரும் என அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.