திருப்பூரில் திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் நஞ்சராயன் குளத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா..!

திருப்பூரில் திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் நஞ்சராயன் குளத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.


திருப்பூர்: திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் இளைஞர் அணி சார்பாக திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நஞ்சுராயன் குளம் சுமார் 440 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தை சுற்றி சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் பல்லுயிர்க்கும் மரங்களை வளர்க்கும் விதமாகவும் திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் இளைஞர் அணி சார்பாக சுமார் ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதன் முன்னோட்டமாக இன்று நஞ்சராயன் குளம் அருகே திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் இளைஞர் அணி சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார்.

வேம்பு, புளிய மரம், புஞ்சை மரம் என பலவகை மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...