கோவை செட்டி வீதியில் உள்ள ரேசன் கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், அங்கு பொருள்களை வாங்கச்செல்லும் பொதுமக்களை தரைக்குறைவாக பேசுவதால் அந்த ஊழியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேமுதிக இளைஞரணி பிரமுகர் வழக்கறிஞருடன் வந்து மனு அளித்தார்.
கோவை: கோயம்புத்தூர் செட்டிவீதியில் மகளிர் சுய உதவிக்குழு நடத்தும் நியாயவிலை கடை செயல்பட்டுவருகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ரேசன் கடை இயங்கி வருவதால் ஒவ்வொரு நாளும் மாறி மாறி பல பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் எப்போது அந்த கடைக்கு சென்றாலும், பொருள்கள் இல்லை என மக்கள் அலைக்கழிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மக்கள் பொருள்கள் வாங்க வரும் போதெல்லாம், அங்கு பணிபுரியும் பெண் ஊழியரான கலைவாணி என்பவர், மக்களை ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசுவதாகக் கூறப்படுகிறது. எனவே ரேசன் கடைக்கு வரும் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கும் ரேசன் கடை பெண் ஊழியரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி இன்று குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதோடு ரேசன் கடை ஊழியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுடன் கையெழுத்து வாங்கி அதனையும் ஆட்சியரிடம் தே.மு.திக. மாணவரணி பிரமுகர் வழக்கறிஞருடன் வந்து ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. எனவே அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக ரேசன் கடைக்கு வரும் மக்களை ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசுவதைத் தடுக்க வேண்டும் எனவும், உடனடியாக எங்களின் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கப்பட்டது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ரேசன் கடை இயங்கி வருவதால் ஒவ்வொரு நாளும் மாறி மாறி பல பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் எப்போது அந்த கடைக்கு சென்றாலும், பொருள்கள் இல்லை என மக்கள் அலைக்கழிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மக்கள் பொருள்கள் வாங்க வரும் போதெல்லாம், அங்கு பணிபுரியும் பெண் ஊழியரான கலைவாணி என்பவர், மக்களை ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசுவதாகக் கூறப்படுகிறது. எனவே ரேசன் கடைக்கு வரும் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கும் ரேசன் கடை பெண் ஊழியரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி இன்று குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதோடு ரேசன் கடை ஊழியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுடன் கையெழுத்து வாங்கி அதனையும் ஆட்சியரிடம் தே.மு.திக. மாணவரணி பிரமுகர் வழக்கறிஞருடன் வந்து ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. எனவே அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக ரேசன் கடைக்கு வரும் மக்களை ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசுவதைத் தடுக்க வேண்டும் எனவும், உடனடியாக எங்களின் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கப்பட்டது.