கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் வீட்டு முன்பு மத்திய அரசை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரிலுள்ள மாநில பொதுச்செயலாளர் வீட்டு முன்பு மத்திய அரசை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தியபடி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரிலுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மகேஷ்குமார் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கவுண்டம்பாளையம் சர்க்கிள் தலைவர் மகேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் பரமசிவம், கார்த்தி, மார்ட்டின், உதயகுமார், கபில்,விஷ்ணு, தேவராஜ், ரங்கசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...