ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 91 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யக்கோரி 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பட்டா வழங்கியதில் மோசடி நடைபெற்றதாகவும், அந்த பட்டாக்களை ரத்து செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட எத்தப்பன் நகரில் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 91 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளது. சிலரின் வீட்டுமனைப்பட்டாக்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து மக்களை ஏமாற்றி உள்ளனர்.
இதுதொடர்பாக, ஏற்கனவே கன்னார்பாளையம், சாஸ்திரி நகர், கைகாட்டி புதூர், கருப்பராயர் நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து 10-வது வாரமாக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.

ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யவில்லை. தற்போது மீண்டும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மனு மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட எத்தப்பன் நகரில் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 91 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளது. சிலரின் வீட்டுமனைப்பட்டாக்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து மக்களை ஏமாற்றி உள்ளனர்.
இதுதொடர்பாக, ஏற்கனவே கன்னார்பாளையம், சாஸ்திரி நகர், கைகாட்டி புதூர், கருப்பராயர் நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து 10-வது வாரமாக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.
ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யவில்லை. தற்போது மீண்டும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மனு மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.