நெகமம் பகுதியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2-டன் ரேஷன் அரிசி பறிமுதல்.!!

பொள்ளாச்சி அடுத்த நெகமம் நான்கு சாலை சந்திப்பில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2-டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியிலிருந்து கடத்த முயன்ற 2-டன் ரேஷன் அரிசி பறிமுதல். ஒருவர் கைது.

பொள்ளாச்சி அடுத்த நெகமம் நான்கு சாலை சந்திப்பில் நேற்று இரவு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர சரக்கு வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டபோது அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் ( 19 ) என்பவரைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தியதில் நெகமம் பகுதியிலிருந்து ரேஷன் அரிசியைப் பெற்று கேரளாவுக்குக் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, சரவணகுமாரைக் கைது செய்த காவல்துறை சரக்கு வாகனம் மற்றும் 2-டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சரவணகுமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...