வால்பாறையில் இரவு நேரத்தில் உணவுத்தேடி குடியிருப்புப்பகுதிக்குள் நுழைந்த 3 காட்டுயானைகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவையைப் பொறுத்தவரை பெரும்பாலான யானைகள் வழித்தடங்கள் எல்லாம் குடியிருப்புபகுதிகளாக உள்ளன.
இதனால் பல நேரங்களில் உணவுகளைத்தேடி வழக்கம் போல அந்தப்பகுதியை நோக்கி யானைகள் வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை தேவை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வனத்துறையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தப்போதும் காட்டுயானைகளின் அட்டகாசத்தால் மக்கள் ஒவ்வொரு நாளும் பெரும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வால்பாறை அருகே உள்ள ஈடியார் எஸ்டேட் பகுதிக்குள் மூன்று காட்டுயானை நுழைந்தது. அப்பகுதியைச்சேர்ந்த சுரேஷ், கருப்பசாமி, ஜான் தாமரையின் வீடுகள் மற்றும் ரேசன் கடைகளை இடித்து சேதப்படுத்தியதோடு அங்குள்ள அரிசு, பருப்பு, சர்க்கரை போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு சென்றது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததோடு, வீடுகளில் உள்ள பாத்திரத்தின் மூலம் சத்தம் எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள்விரட்டியடித்தனர்.

இதோடு யானைகள் ஜான் வீட்டை இடிக்கும் போது ஜான் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் வீட்டின் சமையல் அறை வழியாக தப்பித்து உயிர்தப்பினர்.

இதனால் மிகுந்த அச்சத்தில் உள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியில் வாழும் மக்கள் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் பல நேரங்களில் உணவுகளைத்தேடி வழக்கம் போல அந்தப்பகுதியை நோக்கி யானைகள் வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை தேவை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வனத்துறையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தப்போதும் காட்டுயானைகளின் அட்டகாசத்தால் மக்கள் ஒவ்வொரு நாளும் பெரும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வால்பாறை அருகே உள்ள ஈடியார் எஸ்டேட் பகுதிக்குள் மூன்று காட்டுயானை நுழைந்தது. அப்பகுதியைச்சேர்ந்த சுரேஷ், கருப்பசாமி, ஜான் தாமரையின் வீடுகள் மற்றும் ரேசன் கடைகளை இடித்து சேதப்படுத்தியதோடு அங்குள்ள அரிசு, பருப்பு, சர்க்கரை போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு சென்றது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததோடு, வீடுகளில் உள்ள பாத்திரத்தின் மூலம் சத்தம் எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள்விரட்டியடித்தனர்.
இதோடு யானைகள் ஜான் வீட்டை இடிக்கும் போது ஜான் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் வீட்டின் சமையல் அறை வழியாக தப்பித்து உயிர்தப்பினர்.
இதனால் மிகுந்த அச்சத்தில் உள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியில் வாழும் மக்கள் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.