தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெண்களை விட ஆண்கள் தயக்கம் காட்டுவதாக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை புளியகுளத்தில் உள்ள சாரதா திருமண மஹாலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை கூட்டம் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் புலியகுளம் மற்றும் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு இலவச மருத்துவ ஆலோசனை பெற்றனர். மருத்துவ ஆலோசனைக்கு பின் அறுவை சிகிச்சைக்கான தேவை இருப்பவர்களுக்கு பாரத பிரதமர் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை பாஜக மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் இன்று நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு தேவையுள்ள பெண்களுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு தங்கள் உடல் நலம் குறித்து ஆலோசனை பெறுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் குடியிருப்புகள் அருகில் முகாம்கள் அமைத்து ஆலோசனை வழங்கி வருகின்றோம். இந்த செயல்ளுக்கு பெண்கள் மத்தியில் வரவேறுப்பு கிடைத்துள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தும் நாடுகளில் முதன்மை இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெண்களை விட ஆண்கள் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக, மது பழக்கம் உடைய ஆண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாம்களை நடத்தி அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கோவை புளியகுளத்தில் உள்ள சாரதா திருமண மஹாலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை கூட்டம் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் புலியகுளம் மற்றும் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு இலவச மருத்துவ ஆலோசனை பெற்றனர். மருத்துவ ஆலோசனைக்கு பின் அறுவை சிகிச்சைக்கான தேவை இருப்பவர்களுக்கு பாரத பிரதமர் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை பாஜக மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் இன்று நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு தேவையுள்ள பெண்களுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு தங்கள் உடல் நலம் குறித்து ஆலோசனை பெறுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் குடியிருப்புகள் அருகில் முகாம்கள் அமைத்து ஆலோசனை வழங்கி வருகின்றோம். இந்த செயல்ளுக்கு பெண்கள் மத்தியில் வரவேறுப்பு கிடைத்துள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தும் நாடுகளில் முதன்மை இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெண்களை விட ஆண்கள் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக, மது பழக்கம் உடைய ஆண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாம்களை நடத்தி அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.