கோவை கிணத்துக்கடவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ., தாமோதரன் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கோவை: கோவை கிணத்துக்கடவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை எம்.எல்.ஏ., தாமோதரன் திறந்து வைத்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தாமோதரன் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட செ. தாமோதரன் சுந்தராபுரம் பகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் மக்களிடம் குறைகளை கேட்டு வந்தார்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சட்ட மன்ற அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. செ. தாமோதரன் கலந்து கொண்டு சட்டமன்ற அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர், அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக, பழைய பேருந்து நிலையம் முன்பு அதிமுக கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தாமோதரன் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட செ. தாமோதரன் சுந்தராபுரம் பகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் மக்களிடம் குறைகளை கேட்டு வந்தார்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சட்ட மன்ற அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. செ. தாமோதரன் கலந்து கொண்டு சட்டமன்ற அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர், அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக, பழைய பேருந்து நிலையம் முன்பு அதிமுக கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.