தந்தைப்பெரியாரின் 143 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வால்பாறையில் திமுக கட்சியினர் சார்பாக, பெரியார் திருவுருப படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
கோவை: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், பெண் கல்வி, பெண் சுதந்திரம், சுய மரியாதைக் கிடைப்பதற்கு என பல்வேறு எழுச்சிக்களை ஏற்படுத்திய தந்தைப்பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.
சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து போராடிய பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி தன்னுடைய 95 வயதில் காலமானார். தன்னுடைய கடைசி காலம் வரை திராவிடக்கொள்கையோடு வாழ்ந்து வந்த பெருமைக்குரியவராக விளங்கினார் பெரியார். எனவே இவரை கௌரவிக்கும் விதமாக பெரியாரின் 143 வது பிறந்த தினம் சமூக நீதி நாளாகக்கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் சமூக நீதிக்கான உறுதிமொழி ஏற்று பெரியார் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, வால்பாறையில் திமுக கட்சியின் சார்பில் பெரியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் உள்ள பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் பெரியாரின் சிறப்பினை பற்றிய சிறப்புரை ஆற்றியதோடு, அங்குள்ள மக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியாக பெரியாரின் பிறந்த தினத்தைக்கொண்டாடினர்.

இந்த விழாவில் வால்பாறை திமுக பொறுப்பாளர் பால் பாண்டி, திப்பம்பட்டி ஆரிசாமி, ஜே பாஸ்கர், மகுடிஷ்வரன், செந்தில், ஈ கா, பொன்னுசாமி, செல்வம், வடை கடை குட்டி, r k குமார் சேகர் ஆசை தம்பி, ஜெயராமன் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து போராடிய பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி தன்னுடைய 95 வயதில் காலமானார். தன்னுடைய கடைசி காலம் வரை திராவிடக்கொள்கையோடு வாழ்ந்து வந்த பெருமைக்குரியவராக விளங்கினார் பெரியார். எனவே இவரை கௌரவிக்கும் விதமாக பெரியாரின் 143 வது பிறந்த தினம் சமூக நீதி நாளாகக்கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் சமூக நீதிக்கான உறுதிமொழி ஏற்று பெரியார் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, வால்பாறையில் திமுக கட்சியின் சார்பில் பெரியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் உள்ள பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் பெரியாரின் சிறப்பினை பற்றிய சிறப்புரை ஆற்றியதோடு, அங்குள்ள மக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியாக பெரியாரின் பிறந்த தினத்தைக்கொண்டாடினர்.
இந்த விழாவில் வால்பாறை திமுக பொறுப்பாளர் பால் பாண்டி, திப்பம்பட்டி ஆரிசாமி, ஜே பாஸ்கர், மகுடிஷ்வரன், செந்தில், ஈ கா, பொன்னுசாமி, செல்வம், வடை கடை குட்டி, r k குமார் சேகர் ஆசை தம்பி, ஜெயராமன் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.