வால்பாறை நகராட்சி சுகாதாரத் துறையின் மூலம் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கோவை: வால்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வால்பாறை நகராட்சி சுகாதாரத் துறை மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து வால்பாறை நகராட்சி சுகாதாரத் துறையின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் பள்ளி மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க கபசுர குடிநீர் வழங்கும் பணிகளையும் நகராட்சி சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வால்பாறையில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவ-மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனை மாணவர்கள் விரும்பி கேட்டு வாங்கி அருந்தினர்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகராட்சி சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்கள் பாபு, இளங்கோ, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து வால்பாறை நகராட்சி சுகாதாரத் துறையின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் பள்ளி மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க கபசுர குடிநீர் வழங்கும் பணிகளையும் நகராட்சி சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வால்பாறையில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவ-மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனை மாணவர்கள் விரும்பி கேட்டு வாங்கி அருந்தினர்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகராட்சி சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்கள் பாபு, இளங்கோ, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.