கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பெரியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
கோவை: தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சுந்தராபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திமுக சார்பில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பெரியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்த விழாவில் திராவிட கழகம், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திமுக சார்பில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பெரியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்த விழாவில் திராவிட கழகம், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.