பூங்கா, நியாய விலைக்கடை கட்டிடப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலப்பகுதிகளில் நடைபெற்று வரும் பூங்கா, நியாய விலைக்கடை கட்டிடப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல வார்டுகளில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது காமாட்சி நகர், நாராயணசாமி வீதியில் புதியதாக அமைக்கப்பட்டுவரும் மாநகராட்சி பூங்கா, புதிதாக நியாயவிலைக்கடை கட்டிடம் கட்டப்படுவருவதை பார்வையிட்டார். பின்னர் இப்பணிகளையெல்லாம் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.



மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். இதனைத்தொடர்ந்து, சங்கனூர்‌ மின்மயானத்தில்‌ ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மத்திய மண்டல உதவி ஆணையாளா்‌ பார்வதி, உதவி செயற்பொறியாளா்‌ பிரபாகரன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ திருமால்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...