கொரோனா காலம் என்பதால் கர்ப்பிணிகள் முறையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு திருப்பூர் சமுதாய வளைகாப்பு விழாவில் எம்எல்ஏ செல்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் சமூக நலம், ஒருங்கிணைந்தக் குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தனியார் மண்டபத்தில் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த வளைகாப்பு விழாவில், கலந்துக்கொண்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு தாம்பூலத்துடன், பூ, வளையல் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், 5 வகையான சாதத்துடன் உணவு வழங்கப்பட்டது.
இதனையடுத்து சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தமிழக அரசு பெண்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் கர்ப்பிணிகள் தங்களையும், கருவில் வளரும் குழந்தையையும் ஆரோக்கியத்துடன் கவனித்துக் கொள்ளவதற்கு முறையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதோடு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவி, முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த விழாவில் மாநகர நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் மரகதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த வளைகாப்பு விழாவில், கலந்துக்கொண்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு தாம்பூலத்துடன், பூ, வளையல் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், 5 வகையான சாதத்துடன் உணவு வழங்கப்பட்டது.
இதனையடுத்து சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தமிழக அரசு பெண்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் கர்ப்பிணிகள் தங்களையும், கருவில் வளரும் குழந்தையையும் ஆரோக்கியத்துடன் கவனித்துக் கொள்ளவதற்கு முறையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதோடு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவி, முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த விழாவில் மாநகர நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் மரகதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.