கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவிகளை கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கொரோனா கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடிக்காததால் KG செவிலியர் கல்லூரிக்கு அபராதம் விதித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள், திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் உள்ளிட்டவை இயங்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கோவை சரவணம்பட்டியில் இயங்கி வரும் தனியார் செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த 46 மாணவிகளுக்கு நேற்று கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்களை கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரி விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அஜாக்கிரதையாக கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாமல் செயல்பட்ட தனியார் (KG) செவிலியர் கல்லூரிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள், திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் உள்ளிட்டவை இயங்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கோவை சரவணம்பட்டியில் இயங்கி வரும் தனியார் செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த 46 மாணவிகளுக்கு நேற்று கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்களை கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரி விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அஜாக்கிரதையாக கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாமல் செயல்பட்ட தனியார் (KG) செவிலியர் கல்லூரிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.