முதுகுத் தண்டுவடம் காயமடைந்த மாற்றுத் திறனாளிகள் சுமார் 15 பேர் தங்கள் குடும்பத்தினருடன் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வந்து கலெக்டர் ஜி.எஸ்.சமீரனிடம் குடிசை மாற்று வாரியம் மூலம் மானியத்துடன் வீடு வழங்கக்கோரி மனு அளித்தனர்.
கோவை: முதுகுத் தண்டுவடம் காயமடைந்த மாற்றுத் திறனாளிகள் சுமார் 15 பேர் தங்கள் குடும்பத்தினருடன் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வந்து கலெக்டர் ஜி.எஸ்.சமீரனிடம் குடிசை மாற்று வாரியம் மூலம் மானியத்துடன் வீடு வழங்கக்கோரி மனு அளித்தனர்.
அப்போது முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் கலெக்டர் பரிவோடு குறைகளைக் கேட்டறிந்தார்.
அரசு வழங்கும் மாதாந்திர ஊக்கத் தொகை ரூ.1,500-டன் மாற்றுத்திறனாளிகளை கவனித்துக்கொள்ளும் உதவியாளர்களுக்கென்று 1,000 இணைத்து வழங்க கோரிக்கை வைத்தனர். அதேபோல், அவர்களுக்கு வழங்கிடும் மானிய அடிப்படையிலான வீடு தரை தளத்தில் அமைத்துத் தரவும் கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில், மிகவும் சிரமப்பட்டு வருவதால், பொருளாதார அடிப்படையில் அரசு மற்றும் தனியார் துறைகளில் உடனடி வேலைவாய்ப்பை உருவாக்கித்தரவும் கோரிக்கை வைத்தனர்.
அப்போது, பொள்ளாச்சி சப்கலெக்டர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல மைய அலுவலர் வசந்த ராமகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் கலெக்டர் பரிவோடு குறைகளைக் கேட்டறிந்தார்.
அரசு வழங்கும் மாதாந்திர ஊக்கத் தொகை ரூ.1,500-டன் மாற்றுத்திறனாளிகளை கவனித்துக்கொள்ளும் உதவியாளர்களுக்கென்று 1,000 இணைத்து வழங்க கோரிக்கை வைத்தனர். அதேபோல், அவர்களுக்கு வழங்கிடும் மானிய அடிப்படையிலான வீடு தரை தளத்தில் அமைத்துத் தரவும் கோரிக்கை விடுத்தனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில், மிகவும் சிரமப்பட்டு வருவதால், பொருளாதார அடிப்படையில் அரசு மற்றும் தனியார் துறைகளில் உடனடி வேலைவாய்ப்பை உருவாக்கித்தரவும் கோரிக்கை வைத்தனர்.
அப்போது, பொள்ளாச்சி சப்கலெக்டர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல மைய அலுவலர் வசந்த ராமகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.