அண்ணா 113-வது பிறந்த நாள் விழா கணபதி பகுதி 46-வது வட்டக் கழகம் சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் விழா தமிழகம் எங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


கோவை: பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் விழா தமிழகம் எங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவை கணபதி பகுதி 46-வது வட்டக் கழகம் சார்பாக கட்சி அலுவலக வாசலில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி மதியம் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுகவைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.



பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாள் விழா கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி, கணபதி பகுதி பொறுப்பாளர் கோவை லோகு, 46-வது வட்ட செயலாளர் சாந்தி பன்னீர்செல்வம், ஆலோசனையின்படி, 46 ஆவது வட்ட கோபால்சாமி கோவில் வீதி தளபதி மன்றத்தில் கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி சம்பத்குமார் தலைமையில், கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி முருகேசன் முன்னிலை வகித்தார்.

பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்னர், சம்பத்குமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில்கள் வழங்கியும் மதியம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாணவரணியைச் சேர்ந்த தர்மா, இளைஞரணி கணபதி, ஜெகதீஷ், இலக்கிய அணி சேரன், காமராஜ், கண்ணையன், ஸ்டீபன், சதீஷ், ஈஸ்வரன், கார்த்தி, மகளிர் அணி மலர்விழி உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...