கோவை கிணத்துக்கடவில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திமுக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் துவக்கம்..!

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகம்மது யாசின் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு பேரறிஞர் அண்ணா 113வது பிறந்தநாள் விழா மற்றும் கோவை மாவட்ட திமுக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் துவக்க விழா நடைபெற்றது.



மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னதாக கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகம்மது யாசின் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதனையடுத்து, கோவை மாவட்ட திமுக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கிணத்துக்கடவு கிளை துவங்கப்பட்டது.



இந்த விழாவில் தலைமைக் கழக சொற்பொழிவாளர் கோவை தமிழ்பித்தன், சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, ஒன்றியக் குழு உறுப்பினர் ராமு, பி.பி. ஆறுச்சாமி, ஈஸ்வரன், லட்சுமணன், மணிகண்டன், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி செயலாளர் வழக்கறிஞர் வித்யாசாகர், கோபாலகிருஷ்ணன், செந்தில்குமார், சிபிஎம் மருதாசலம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சுப்பிரமணியன், அண்ணா பேருந்து நிலையம் ஆட்டோ சங்க செயலாளர் டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...