உடுமலைப்பேட்டையில் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை..!

உடுமலை பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று திமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.


திருப்பூர்: அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அறிஞர் அண்ணா கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என ஒவ்வொரு மாநிலங்களின் உரிமைக்காக குரல் கொடுத்த திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவரும், திமுக உருவாக காரணகர்த்தாவாக இருந்த அறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாள் விழா உடுமலைப்பேட்டையில் கொண்டாடப்பட்டது.

உடுமலை பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று திமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் மத்தீன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், சியாம் ஈஸ்வரன், சாகுல் அமீது, கிரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.



இதனைத் தொடர்ந்து, அதிமுக சார்பிலும் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நகர செயலாளர் ஹக்கீம் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...