கோவை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயல் கேர் மருத்துவர் மருத்துவமனையை விரிவாக்கம் மற்றும் கட்டிட வேலைக்காக லோன் வாங்கி தருவதாக கூறி 2.85 கோடி கமிஷன் தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்ட ஆசாமிகளை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் உத்தரவின் பேரில் அவர்கள் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை ராயல்கேர் மருத்துவமனை தலைவர் மருத்துவர் மாதேஷ்வரனுக்கு கடன் ஏற்பாடு செய்து தருவதாக கடந்த, 2020 அக்., மாதம் புதுக்கோட்டை, ஆலங்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம் (55) உள்ளிட்ட 4 நபர்கள் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, கமிஷன் தொகையாக, 2.85 கோடி ரூபாய் பெற்றவர்கள் மோசடி செய்தனர்.
கோவை மாநகர குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வம் மற்றும் செல்வகுமார் (54) ஆகியோரை கடந்த 15ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.
இதனிடையே, கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் உத்தரவின் பேரில் அவர்கள் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை ராயல்கேர் மருத்துவமனை தலைவர் மருத்துவர் மாதேஷ்வரனுக்கு கடன் ஏற்பாடு செய்து தருவதாக கடந்த, 2020 அக்., மாதம் புதுக்கோட்டை, ஆலங்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம் (55) உள்ளிட்ட 4 நபர்கள் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, கமிஷன் தொகையாக, 2.85 கோடி ரூபாய் பெற்றவர்கள் மோசடி செய்தனர்.
கோவை மாநகர குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வம் மற்றும் செல்வகுமார் (54) ஆகியோரை கடந்த 15ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.