உபரிநீர் திறப்பால் ஆழியாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சி ஆழியாறு அணை நிரம்பி வழிந்த நிலையில், 7 மதகுகள் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தினால் நேற்றிலிருந்து அணை நிரம்பி வழிந்தது.
இந்நிலையில், இன்று 7 மதகுகளில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆதலால் கரையோரப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 1,050 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
உபரிநீர் திறப்பால் ஆழியாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தினால் நேற்றிலிருந்து அணை நிரம்பி வழிந்தது.
இந்நிலையில், இன்று 7 மதகுகளில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆதலால் கரையோரப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 1,050 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
உபரிநீர் திறப்பால் ஆழியாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.