வரும் அக்டோபர் 1ம் தேதி தெற்கு ரயில்வேயின் புதிய நேர அட்டவணை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை: பொள்ளாச்சி வழியாக கோவை, திண்டுக்கல் ஊர்களுக்கு மீண்டும் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கு இரண்டு பயணிகள் ரயில் இயங்கி வந்தது.
கொரோனா முதல் அலை காரணமாக அந்த பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டன. இதனிடையே, இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கத்தை துவங்க வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே ஆறு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் மீண்டும் பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல், கோவைக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேசமயம், ரயில் இயக்கம் துவங்கும் தேதி, நேரம் தெரிவிக்கவில்லை. வரும் அக்.,1ல், தெற்கு ரயில்வேயின் புதிய நேர அட்டவணை வெளியிடப்பட உள்ளது.
கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கு இரண்டு பயணிகள் ரயில் இயங்கி வந்தது.
கொரோனா முதல் அலை காரணமாக அந்த பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டன. இதனிடையே, இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கத்தை துவங்க வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே ஆறு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் மீண்டும் பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல், கோவைக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேசமயம், ரயில் இயக்கம் துவங்கும் தேதி, நேரம் தெரிவிக்கவில்லை. வரும் அக்.,1ல், தெற்கு ரயில்வேயின் புதிய நேர அட்டவணை வெளியிடப்பட உள்ளது.