சிறுவாணி அணை நீர்மட்டம் 40.6 அடியாக உயர்வு..!

கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.6 அடியாக உயர்ந்து உள்ளது. இதனால், அடுத்த 6 மாதங்களுக்கு கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.6 அடியாக உயர்ந்து உள்ளது. இதனால், அடுத்த 6 மாதங்களுக்கு கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கும், வழியோர கிரமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தில் உள்ள போதிலும், அணை கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்த அணை 50 அடி உயரம் கொண்டது. இருப்பினும், அணையின் பாதுகாப்பிற்காக 45 அடி உயரம் வரை மட்டுமே குடிநீரை தேக்க கேரள அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை சீராக பெய்து வருவதால், அதனை ஒட்டியுள்ள நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கோவை நொய்யல் ஆற்றிலும், சித்திரைசாவடி தடுப்பணையை தாண்டி ஆற்று நீர் வந்து கொண்டு உள்ளது. இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 35 அடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது, அணைக்கு அதிகளவு தண்ணீர் வருவதால் அணையின் நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 40.6 அடி என்ற அளவில் உள்ளது. தற்போது, அணையில் இருந்து நாள்தோறும் 101 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் கோவை மாநகராட்சியின் தேவைக்காக மட்டும் 97.8 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...