வால்பாறையில் வாழ்வாதாரங்கள் குறைந்து விட்டதாலும் கொரோனா தொற்று காரணமாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாடகையை தங்களால் கட்ட இயலாது என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வால்பாறை: வால்பாறையில் வாழ்வாதாரங்கள் குறைந்து விட்டதாலும் கொரோனா தொற்று காரணமாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாடகையை தங்களால் கட்ட இயலாது என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான 300-கடைகள் உள்ளன. இந்த கடைகளை வைத்திருக்கும் வியாபாரிகள் வாடகை முன்பணம் தொகை தொழில் வரி GST, இந்த ஆண்டு கடை வாடகை 15-சதவீதம் உயர்வு காரணமாக ஒவ்வொரு வியாபாரியும் பல லட்சங்கள் நகராட்சிக்குக் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது வால்பாறை பகுதியில் வாழ்வாதாரங்கள் குறைந்து விட்ட காரணத்தினாலும் கொரோனா தொற்று காரணமாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாடகையை தங்களால் கட்ட இயலாத நிலையில் இருப்பதால் இதற்குத் தீர்வு காண சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதற்குத் தீர்வு காண வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் சங்க செயலாளர் கீரீன்ஹில்ஸ் ஷாஜூ, பொருளாளர் ஜேசுதாஸ், வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமாரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

இந்த தொகையைக் கண்டிப்பாகக் கட்ட வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் கூறியதன் பேரில் தற்போது தவணை முறையில் கட்ட ஆவண செய்ய வேண்டும் என்று வால்பாறையில் உள்ள வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் ஆணையாளர் கூறுகையில், தாங்கள் வாடகை முன்பணம் தொகையை உடனடியாக கட்டினால் அதற்குத் தகுந்தாற் போல் உயர் அதிகாரிகளைச் சந்தித்து அதற்குத் தீர்வு காணப்படும் என்று கூறினார்.
இந்த பேச்சுவார்த்தையில், நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் மற்றும் பொறியாளர் வெங்கடாசலம் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான 300-கடைகள் உள்ளன. இந்த கடைகளை வைத்திருக்கும் வியாபாரிகள் வாடகை முன்பணம் தொகை தொழில் வரி GST, இந்த ஆண்டு கடை வாடகை 15-சதவீதம் உயர்வு காரணமாக ஒவ்வொரு வியாபாரியும் பல லட்சங்கள் நகராட்சிக்குக் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது வால்பாறை பகுதியில் வாழ்வாதாரங்கள் குறைந்து விட்ட காரணத்தினாலும் கொரோனா தொற்று காரணமாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாடகையை தங்களால் கட்ட இயலாத நிலையில் இருப்பதால் இதற்குத் தீர்வு காண சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதற்குத் தீர்வு காண வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் சங்க செயலாளர் கீரீன்ஹில்ஸ் ஷாஜூ, பொருளாளர் ஜேசுதாஸ், வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமாரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.
இந்த தொகையைக் கண்டிப்பாகக் கட்ட வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் கூறியதன் பேரில் தற்போது தவணை முறையில் கட்ட ஆவண செய்ய வேண்டும் என்று வால்பாறையில் உள்ள வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் ஆணையாளர் கூறுகையில், தாங்கள் வாடகை முன்பணம் தொகையை உடனடியாக கட்டினால் அதற்குத் தகுந்தாற் போல் உயர் அதிகாரிகளைச் சந்தித்து அதற்குத் தீர்வு காணப்படும் என்று கூறினார்.
இந்த பேச்சுவார்த்தையில், நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் மற்றும் பொறியாளர் வெங்கடாசலம் கலந்து கொண்டனர்.