கோவையில் 10-கோடி ரூபாய் மதிப்புள்ள 66-சென்ட் இடம் மீட்பு- மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.!!

கோவை: 35-வது வார்டு, காளப்பட்டி கிராமம் அருகே பெரியார் நகரில், 10-கோடி ரூபாய் மதிப்புள்ள 66-சென்ட் இடம் மீட்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: 35-வது வார்டு, காளப்பட்டி கிராமம் அருகே பெரியார் நகரில், 10-கோடி ரூபாய் மதிப்புள்ள 66-சென்ட் இடம் மீட்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 35-வது வார்டு, காளப்பட்டி கிராமம் அருகே பெரியார் நகரில் உள்ள ஒரு லே-அவுட்டில் சமுதாயக் கூடத்திற்காக 66-சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அந்த இடத்தை 10-நபர்களுக்குப் போலி வரைபடம் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு காளப்பட்டி பேரூராட்சி அதிகாரிகளால் அனுமதி வழங்கி, மனைகளாக கிரையம் செய்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.

கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா உத்தரவை அடுத்து, கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி புவனேஸ்வரியால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



இதன் உண்மை தன்மை தெரியவந்ததால் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கம்பி வேலிகள் மற்றும் 8-குடிசைகளை அகற்றி மாநகராட்சி சார்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.



இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "10-கோடி ரூபாய் மதிப்புள்ள 66-சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் திட்டமிட்டபடி சமுதாயக்கூடம் அமைக்கப்படும்," என்றார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...