பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.!!

பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வேலூர் இப்ராஹிம் பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இஸ்லாமிய அமைப்புகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பேச்சுவார்த்தை நடத்தித் திருப்பி அனுப்பி வைத்தார்.


கோவை: பொள்ளாச்சியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வேலூர் இப்ராஹிம் பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டம், புதிய வேளாண் திருத்தச்சட்டம், நீட் தேர்வு போன்ற சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்குப் பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இந்தநிலையில், இன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசைக் கண்டித்தும், தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலினைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம்., கோவை குண்டுவெடிப்பு கைதிகளைக் கருணை அடிப்படையில், அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்ய வேண்டும் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் தமிழக முதலமைச்சருடன் வைத்த கோரிக்கையை நிராகரித்து, அண்ணா பிறந்தநாளில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்றும், சிஏஏ போன்ற விஷயங்களில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சரியான புரிதலோடு பேச வேண்டுமென்றும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை ஜனநாயக ரீதியாக விவாதிக்கத் தயாராக பாஜக இருக்கிறது என்றும் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வேலூர் இப்ராஹிமுக்கு பொள்ளாச்சி பகுதியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் எதிர்ப்பு தெரிவித்து இருந்த இஸ்லாமிய அமைப்புகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பேச்சுவார்த்தை நடத்தித் திருப்பி அனுப்பி வைத்தார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...