கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தியதை குறித்து இன்று முதல் கட்ட கருத்துக்கேட்புக்கூட்டம்.!!

தமிழகத்தில் 121-நகராட்சிகள் இருந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற 29-பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்த ஆணையிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக 121-நகராட்சிகளாக இருந்தது 150-ஆக உயர்ந்தது.


கோவை: கோவையில் பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்தியதை குறித்து இன்று முதல் கட்ட கருத்துக்கேட்புக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், கே.என்.நேரு புதியதாக 29- பேரூராட்சிகளை நகராட்சிகளாக அறிவித்தார். தமிழகத்தில் 121-நகராட்சிகள் இருந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற 29-பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்த ஆணையிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக 121-நகராட்சிகளாக இருந்தது 150-ஆக உயர்ந்தது.



இந்நிலையில், கோயம்புத்தூர் கருமத்தாம்பட்டி, கூடலூர், காரமடை, மதுக்கரை பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தியது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது.



இதில் நான்கு நகராட்சியைச் சார்ந்த முன்னாள் கவுன்சிலர்கள், அரசியல் கட்சியினர், கிராம ஊராட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு கருத்துக்களை பதிவிட்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...