நண்பருடன் மது குடித்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலியான சம்பவத்தில், குடிபோதையில் வாய்க்காலில் விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: நண்பருடன் மது குடித்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வாய்க்காலில் விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மடத்துக்குளம் அருகே உள்ள கணியூரில் உள்ள விவசாய பாசன வாய்க்காலில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது.
இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதில் இறந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ரவி என்பதும் நேற்று மாலை வாய்க்காலின் கரைப் பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியது தெரியவந்துள்ளது.
எனவே நண்பர்களுடன் ஏற்பட்ட தகராற்றில் ரவி கொலை செய்யப்பட்டாரா அல்லது குடிபோதையில் வாய்க்காலில் விழுந்து இறந்தாரா என கணியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.