கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு எதிரொலி; கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ரத்து..!

கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு சரியான முறையில் தகவல் செல்லாததால் கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு எதிரொலியால் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது.

அதன்படி, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெ.10 முத்தூர் ஊராட்சியில் காலியாக உள்ள 2வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்த ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு சரியான முறையில் தகவல் செல்லாததால் வழக்கம் போல் இன்று கூட்டத்திற்கு கலந்துகொள்ள வந்த உறுப்பினர்கள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...