கோவை: உருமாறிய மக்கள் நீதி மய்யம் தற்போது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.
கோவை: 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக பொள்ளாச்சியில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட தென்கிழக்கு தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் தங்கவேல் கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்து, ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, உருமாறிய மக்கள் நீதி மய்யம் தற்போது சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் குழுக்கள் நியமிக்கப்பட்டு தேர்தலுக்குத் தயாராகி வருகிறோம்.
நாங்கள் சட்டசபைக்குச் செல்லவில்லை என்றாலும் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக குரல் கொடுப்பது மக்கள் நீதி மய்யம் தான், நாங்கள் அறிவித்த திட்டங்களை தான் தற்போதைய தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
கமல்ஹாசன் சொன்ன ஆலோசனைகளை கேட்டு, எங்களின் திட்டங்களை வழிநடத்திச் செல்லும் திமுகவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலில் மிக பெரிய வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட தென்கிழக்கு தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் தங்கவேல் கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்து, ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, உருமாறிய மக்கள் நீதி மய்யம் தற்போது சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் குழுக்கள் நியமிக்கப்பட்டு தேர்தலுக்குத் தயாராகி வருகிறோம்.
நாங்கள் சட்டசபைக்குச் செல்லவில்லை என்றாலும் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக குரல் கொடுப்பது மக்கள் நீதி மய்யம் தான், நாங்கள் அறிவித்த திட்டங்களை தான் தற்போதைய தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
கமல்ஹாசன் சொன்ன ஆலோசனைகளை கேட்டு, எங்களின் திட்டங்களை வழிநடத்திச் செல்லும் திமுகவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலில் மிக பெரிய வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.