நேரு கல்விக் குழுமம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான பி.கே.தாஸ் நினைவு விருது வழங்கும் விழா அனுசரிப்பு


நேரு கல்விக் குழுமத்தின் திரு.பி.கே.தாஸ் நினைவு சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில், வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த ஆசிரியர்களுக்கான விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டிற்கான பி.கே.தாஸ் விருது வழங்கும் விழா வியாழனன்று நேரு கல்விக் குழுமத்தின் பி.கே.தாஸ் நினைவு அரங்கத்தில் அனுசரிக்கப்பட்டது.



இதில், 10 கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் 12 தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதும், 2 ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.



நேரு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்று விருது பெற்ற ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினார். இதைத்தொடர்ந்து, நேரு கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் இவ்விழாவில் முன்னிலை வகித்து பேசியதாவது:- பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் ஆசிரியர்கள் எதிர்காலத்தில் இதுபோல் விருதினைப் பெற வேண்டும். இந்த கல்வி நிறுவனத்தில் வளர்ச்சி என்பது தரமும், நேரு கல்விக் குழுமத்தின் நிறுவன முறையையும் பி.கே.தாஸ் தொலைநோக்குப் பார்வையால் சாத்தியமானது. நேரு கல்விக் குழுமத்தின் தரம் ஆசிரியர்கள் கையில் உள்ளது. குரு கடவுளுக்கு மேலாக கருதப்படுகிறார்கள்'' என்றார்.



இதைத்தொடர்ந்து, நேரு கல்விக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியும், செயலாளருமான பி.கிருஷ்ணகுமார் பரிசு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து, தங்களது அறிவினையும், தரத்தினையும் மேம்படுத்த வேண்டும் என கூறினார்.



சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் மன்பிரீத் சிங் மன்னா ஏஐசிடிஇ இயக்குநர் பேசுகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வது தேவை. தொடர்ந்து, தங்களது திறனை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். பி.கே.தாஸ்-யின் தொலைநோக்குபார்வையால் தான் நேரு கல்விக் குழுமம் இத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும், அவர் காலத்தில் கல்லூரி துவங்குவதற்கான உறுதியான மனம் பாராட்டத்தக்கது'' என்றார்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...