கோவை: கோவை மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க வேண்டும் என்று பாரத ஜனதா கட்சியின் சூலூர் கவுன்சிலர் கோபால சாமி மற்றும் காரமடை சங்கீதா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க வேண்டும் என்று பாரத ஜனதா கட்சியின் சூலூர் கவுன்சிலர் கோபால சாமி மற்றும் காரமடை சங்கீதா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக- திமுக பாரதிய ஜனதா கட்சியினர் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி காரமடை சங்கீதா மற்றும் கோபால்சாமி சூலூர் ஆகிய இருவரும் பாரத பிரதமர் மோடியின் புகைப்படம் அந்த அறைக்குள் வைக்க வேண்டும் எனப் பலமுறை மாவட்ட ஊராட்சித் தலைவர் சாந்தி அசோகன் இடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆலோசனைக் கூட்டத்தை வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.