கோவை மாவட்டம் பொள்ளாச்சியையடுத்த சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி, அக்கா வீட்டாருக்குக் கொடுத்த கடனைத் திருப்பிக்கேட்ட போது கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியையடுத்த சூளேஸ்வரன்பட்டி அழகப்பா காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதியில் பெயிண்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது அக்காவின் கணவரின் அவசரத் தேவைக்காக ரூ.45 ஆயிரத்தை கடனாக கொடுத்திருக்கிறார் நாகராஜ். பல நாட்கள் ஆன நிலையில் இந்தப் பணத்தைத் திருப்பி தராமல் இவரது அக்கா குடும்பத்தினர் அலைக்கழித்து வந்துள்ளனர். இதற்கிடையில் தான் நாகராஜ், தனது அக்கா வீட்டிற்குச் சென்று பணத்தை திருப்பித் தருமாறு வலியுறுத்திய போது, அவர்கள் தர மறுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த பெயிண்டர் நாகராஜ் நேற்று மதியம் அப்பகுதியில் இருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக இதுக்குறித்து தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்த நாகராஜிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பாக அவரை டவரில் இருந்து கீழே இறங்க செய்தனர்ஃ இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
இதனால் மனமுடைந்த பெயிண்டர் நாகராஜ் நேற்று மதியம் அப்பகுதியில் இருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக இதுக்குறித்து தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்த நாகராஜிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பாக அவரை டவரில் இருந்து கீழே இறங்க செய்தனர்ஃ இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.