கிணத்துக்கடவு தாலுகாவில் 94 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்! 6375 மக்கள் பயன்பெற்றனர்!

கோவை கிணத்துக்கடவு தாலுகாவில் 94 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் நேற்று 6375 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


கோவை:தமிழகம் முழுவதும் நேற்று கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. அரசு உத்தரவின் படி நேற்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற முகாமில் ஆர்வத்துடன் வந்து மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். குறிப்பாக கோவை மாவட்டத்தைப்பொறுத்தவரை 1475 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. இதில் கிணத்துக்கடவு தாலுகாவில் உள்ள 34 கிராமப்பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசுப்பள்ளி, அங்கன்வாடி மையங்கள், சமுதாயக்கூடம் உள்ளிட்ட 94 இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 7மணி வரை சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டது. இதில் கோவிட்ஷூல்டு மற்றும் கோவாக்சீன் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை மக்கள் ஆர்வத்துடன் வந்து செலுத்திக்கொண்டனர்.

இதன்படி, நேற்று மட்டும் கிணத்துக்கடவு தாலுகாவில் மொத்தம் 6375 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக பல முறை அரசு மருத்துவமனைக்கு சென்றப்போதும் தடுப்பூசி கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் இந்த முகாம்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மக்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...