மலையில் மண்சரிவின் காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக ரயி‌ல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், குன்னூர்- உதகை வரையில் தொடர்ந்து ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர்க்கு மலை ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக உதகை, நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரம் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர்க்கு செல்லக் கூடிய மலை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாறைகளும் ரயில் பாதையில் விழுந்துள்ளதால் அதனை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் வரையிலான ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், குன்னூரில் இருந்து உதகை வரையிலான ரயில் சேவை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

Newsletter

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...