கோவை 'பன் ரிபப்ளிக் மாலில்' காரில் அமர்ந்தபடி தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்: 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது..!

கோவையில் மாநகராட்சி சார்பில் 305 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 முதல் மாலை 7 மணி வரை இந்த முகாம்கள் செயல்படும்.


கோவை: இன்று தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



குறிப்பாக, கொரோனா நோய் பரவல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கி முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 1.5 பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கை அடைய, மாவட்ட நிற்வாகம் மற்றும் மாநகராட்சி பல்வேறு நவீன முறைகளை அறிமுகப்படுத்தி பொதுமக்கள் சிரமப்படாமல், அதிக நேரம் செலவிடாமல் தடுப்பூசி செலுத்திகக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



அதன் ஒரு பகுதியாக, காரில் அமர்ந்தபடியே தடுப்பூசி செலுத்தும் drive - thru முறையை கோவை அவிநாசி சாலையில் உள்ள 'பன் ரிபப்ளிக் மால்' ( Fun Republic Mall) வளாகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தடுப்பூசி மையத்திற்கு வரமுடியாத வயது முதிந்தவர்கள், கூட்டத்தை தவிர்க்க விரும்புவோர் என பல்வேறு பொதுமக்கள் இந்த நவீன திட்டத்தின் மூலம் இன்று பயனடைந்தனர்.

இந்த முகாம் ஏற்பாடுகளை 'பன் ரிபப்ளிக் மால்' மேலாளர், ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். முகாமில் 300 பேர் காரில் அமர்ந்தபடி தடுப்பூசி செலுத்தி பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...