வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்த கோவை வியாபாரி மாயம்; சடலமாக மீட்ட போலீசார்!

கோவையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த சில தினங்களாக மாயமான எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர், பவானி அருகே சடலமாக மீட்கப்பட்டார்.


கோவை: கோவை கஸ்தூரிநாயக்கன் பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் 54 வயதான ஜெயக்குமார். இவர் காட்டூரில் எலக்ட்ரிக் பொருள்களை விற்பனைச் செய்யும் கடை நடத்தி வருகிறார். கொரோனா காலக்கட்டத்தில் அனைத்துக் கடைகளிலும் வியாபாரம் முடங்கிப்போன நிலையில் இவரது கடையிலும் வியாபாரம் சரியாக நடக்கவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட இவர் மனமுடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இந்த சூழலில் தான் கடந்த 7 ஆம் தேதி தீடிரென வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில் தான் இவரது மனைவி மங்கையர்கரசி மற்றும் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் வடவள்ளி காவல் நிலைய போலீசார் காணாமல் போனவர் குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்த விசாரணையின் போது தான், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மாயமான ஜெயக்குமார், இன்று பவானி லெட்சுமி நகர் சோதனைச் சாவடி அருகே உயிரிழந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்டமாக அவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர் அவரை உடலைக் கைப்பற்றிபோலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...