கோவை: கோவையில் சேலையில் தீப்பிடித்து ஓய்வு பெற்ற பெண் டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கோவையில் சேலையில் தீப்பிடித்து ஓய்வு பெற்ற பெண் டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ ரோட்டை சேர்ந்தவர் நடராஜன் என்பவரது மனைவி கண்ணகி (69), இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர், நேற்று வீட்டில் பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில், தீப்பிடித்து அது மளமளவென உடல் முழுவதும் பரவ தொடங்கியது.
அவர் வலியால் துடித்தார். குடும்பத்தினர் மீட்டு கோவையில், உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, சிங்காநல்லூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.