கோவை கோட்டூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இன்று 100க்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தபட்டது.
கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் மக்களிடையே நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இன்று 1475 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமின்றி கார்களில் அமர்த்தபடியே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முறையை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் கோவை கோட்டூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், கோட்டூர் காவல் நிலையம் சார்பாக தடுப்பூசி ஊசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எனவே இந்த முகாமின் மூலம் அகதிகள் முகாமில் உள்ள 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இந்நிலையில் கோவை கோட்டூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், கோட்டூர் காவல் நிலையம் சார்பாக தடுப்பூசி ஊசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எனவே இந்த முகாமின் மூலம் அகதிகள் முகாமில் உள்ள 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.