வால்பாறை: வால்பாறையில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு நண்பர்கள் குழுமம் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
வால்பாறை: வால்பாறையில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு நண்பர்கள் குழுமம் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வால்பாறை சோலையாறு அணை செல்லும் சாலையில் ஸ்டேன் மோர் எஸ்டேட் அருகே உள்ள படகு இல்லம் வளைவில் ஜீப்பும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து நடைபெற்றது.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய சாபு என்கின்ற ஆண்டனி பலத்த காயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காலில் பலத்த காயம் அடைந்த சாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த சாபு என்கின்ற ஆண்டனிக்கு வால்பாறை நண்பர்கள் குழுமம் சார்பில் சலாவுதீன் அவர்கள் தலைமையில் ரூபாய் 50-ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
நிகழ்வில் கருணாகரன், பாலாஜி, வெள்ளியங்கிரி, மணிகண்டன், வாமதேவன், பிரசாத், காமேஷ் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வால்பாறை சோலையாறு அணை செல்லும் சாலையில் ஸ்டேன் மோர் எஸ்டேட் அருகே உள்ள படகு இல்லம் வளைவில் ஜீப்பும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து நடைபெற்றது.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய சாபு என்கின்ற ஆண்டனி பலத்த காயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காலில் பலத்த காயம் அடைந்த சாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த சாபு என்கின்ற ஆண்டனிக்கு வால்பாறை நண்பர்கள் குழுமம் சார்பில் சலாவுதீன் அவர்கள் தலைமையில் ரூபாய் 50-ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
நிகழ்வில் கருணாகரன், பாலாஜி, வெள்ளியங்கிரி, மணிகண்டன், வாமதேவன், பிரசாத், காமேஷ் ஆகியோர்கள் உடனிருந்தனர்.