கோவையில் பணியின் போது உயிரிழந்த வன அதிகாரிகளை நினைவு கூரும் வகையில், வனக்கல்லூரி வளாகத்தில் வன தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவு தூணிற்கு அதிகாரிகள் மரியாதை செய்தனர்.
கோவை: வனத்தைப் பாதுகாப்பதற்காக பணியின் போது உயிரிழந்த வனத்துறை ஊழியர்களை நினைவுகூரும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் மூலம் செப்டம்பர் 11 ஆம் தேசிய வன தியாகிகள் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவானது தேசிய அளவில் ஒவ்வொரு வனச்சரக்கத்திலும் பணியின் போது உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் வகையில் அவர்களுக்கு மரியாதை செய்து வன அதிகாரிகளால் இத்தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது.

அதன்படி, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

அப்போது கல்லூரியில் உயிரிழந்த தியாகிகளை நினைவுகூரும் விதமாக கடந்த 2017 ஆம் ஆண்டு நினைவுத் தூணிற்கு வனத்துறைகள் மலர்கள் வைத்தும், காவல்துறை சார்பில் 27 குண்டுகள் முழங்கவும் வன தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. குறிப்பாக இவ்விழாவில் அண்மையில் பணியில் உயிரிழந்த வனக்காவலர் சதீஸ்குமார் குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர்.
இதனையடுத்து விழாவின் போது பேசிய அதிகாரிகள், வனத்தையும், வன உயிரினங்களை பாதுகாக்கும் பணியில் உயிர் தியாகத்தை நினைவுகொள்ளவும், சக ஊழியர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காகக் இத்தினம் கடை பிடிக்கப்படுவதாக தெரிவித்தனர். வனத்துறை சார்பில், தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகத்தின் இயக்குநரும் கூடுதல் முதன்மை வன பாதுகாவலருமான மஞ்சுநாதா மற்றும் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் மாநில வன பணிகளுக்கான முதல்வர் திருநாவுக்கரசு, கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் அன்வர்தீன், கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவானது தேசிய அளவில் ஒவ்வொரு வனச்சரக்கத்திலும் பணியின் போது உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் வகையில் அவர்களுக்கு மரியாதை செய்து வன அதிகாரிகளால் இத்தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
அதன்படி, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
அப்போது கல்லூரியில் உயிரிழந்த தியாகிகளை நினைவுகூரும் விதமாக கடந்த 2017 ஆம் ஆண்டு நினைவுத் தூணிற்கு வனத்துறைகள் மலர்கள் வைத்தும், காவல்துறை சார்பில் 27 குண்டுகள் முழங்கவும் வன தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. குறிப்பாக இவ்விழாவில் அண்மையில் பணியில் உயிரிழந்த வனக்காவலர் சதீஸ்குமார் குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர்.
இதனையடுத்து விழாவின் போது பேசிய அதிகாரிகள், வனத்தையும், வன உயிரினங்களை பாதுகாக்கும் பணியில் உயிர் தியாகத்தை நினைவுகொள்ளவும், சக ஊழியர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காகக் இத்தினம் கடை பிடிக்கப்படுவதாக தெரிவித்தனர். வனத்துறை சார்பில், தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகத்தின் இயக்குநரும் கூடுதல் முதன்மை வன பாதுகாவலருமான மஞ்சுநாதா மற்றும் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் மாநில வன பணிகளுக்கான முதல்வர் திருநாவுக்கரசு, கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் அன்வர்தீன், கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.