கோவை: வால்பாறையில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 41 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோவை: வால்பாறையில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 41 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் லோக் அதலாத் நீதிபதி SP.கவிதா தலைமையில் இன்று நடைபெற்றது. இதற்கு வழக்கறிஞர்கள் RR.பெருமாள், முத்துச்சாமி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் காசோலை மோசடி வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், மோட்டார் வாகன சிறு வழக்குகள் உள்ளிட்ட 53 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 41 வழக்குகள் தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.

மேலும், அபராதத் தொகை, காசோலை மற்றும் ஜீவனாம்ச வழக்குகளில் ரூ. 9,39,600/-- வசூலித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளில் வழக்கறிஞர்கள் RR.பெருமாள், முருகன், முத்துசாமி, அன்பு நாகராஜ், தன்னார்வலர்கள் முனியாண்டி, மூர்த்தி (எ) நேரு, முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் லோக் அதலாத் நீதிபதி SP.கவிதா தலைமையில் இன்று நடைபெற்றது. இதற்கு வழக்கறிஞர்கள் RR.பெருமாள், முத்துச்சாமி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் காசோலை மோசடி வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், மோட்டார் வாகன சிறு வழக்குகள் உள்ளிட்ட 53 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 41 வழக்குகள் தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.
மேலும், அபராதத் தொகை, காசோலை மற்றும் ஜீவனாம்ச வழக்குகளில் ரூ. 9,39,600/-- வசூலித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளில் வழக்கறிஞர்கள் RR.பெருமாள், முருகன், முத்துசாமி, அன்பு நாகராஜ், தன்னார்வலர்கள் முனியாண்டி, மூர்த்தி (எ) நேரு, முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.