கோவை: அகில இந்திய அளவிலான கலை-அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை மதிப்பீட்டுப் பட்டியலில் உடுமலை அரசு கலைக்கல்லூரி 98வது இடத்தை பிடித்துள்ளது.
கோவை: அகில இந்திய அளவிலான கலை-அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை மதிப்பீட்டுப் பட்டியலில் உடுமலை அரசு கலைக்கல்லூரி 98வது இடத்தை பிடித்துள்ளது.
அகில இந்திய அளவில் ஆண்டுதோறும் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை மதிப்பீட்டுப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
இந்த மதிப்பீடு கற்றல் கற்பித்தல் முறையில் மாணவர்களின் சேர்க்கை விகிதம், உள்கட்டமைப்பு வசதி, பேராசிரியரின் கல்வித்தகுதி, ஆராய்ச்சி, கட்டுரைகள் வெளியீடு, ஆசிரியர் மாணவர் விகிதம் பேராசிரியர்களின் பணி அனுபவம், மாற்றுத்திறனாளி சேர்க்கை, போன்றவற்றை மையமாக வைத்து இந்த தரவரிசை மதிப்பீடு வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு உடுமலை அரசு கலைக் கல்லூரி 98வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் இந்த தரவரிசையில் 28 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள 5 அரசு கலைக்கல்லூரிகள் அனைத்துமே நகர்ப்புறங்களில் அமைந்துள்ளது.
கிராமப்புற இளைஞர்களின் வாழ்வை முன்னேற்றும் கிராமப்புற கல்லூரிகளில் உடுமலை அரசு கலைக் கல்லூரி முதலிடம் வகிக்கிறது. இக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். இந்த பேராசிரியர்களின் உறுதுணையோடு பலர் முனைவர் பட்டம் பெற்று வருகின்றனர். அது கல்லூரிக்கு பெருமை சேர்க்கிறது. ஏழை எளிய நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் இங்கு அதிகளவில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கி அவர்கள் வாழ்வில் முன்னேற இக்கல்லூரி பேராசிரியர்கள் பேருதவியாக திகழ்ந்து வருகின்றனர்.
அதேபோல, கல்லூரித் தேர்வுகளில் பல்கலைக்கழக அளவில் உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று வருகின்றனர். மேலும், இந்த தரவரிசை மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க உறுதுணையாக இருந்த முனைவர் H.B. ராமலிங்கம், முனைவர் கருணாநிதி, முனைவர் வெங்கடேஷ் ஆகியோருக்கு கல்லூரி பேராசிரியர் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
இக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கடின உழைப்பால் மேலும் சிறப்பு பெறும் அடுத்த ஆண்டு மேலும் இக்கல்லூரி முன்னேற்றப் பாதையில் செல்லும் என கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துக்கொண்டார்.
அகில இந்திய அளவில் ஆண்டுதோறும் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை மதிப்பீட்டுப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
இந்த மதிப்பீடு கற்றல் கற்பித்தல் முறையில் மாணவர்களின் சேர்க்கை விகிதம், உள்கட்டமைப்பு வசதி, பேராசிரியரின் கல்வித்தகுதி, ஆராய்ச்சி, கட்டுரைகள் வெளியீடு, ஆசிரியர் மாணவர் விகிதம் பேராசிரியர்களின் பணி அனுபவம், மாற்றுத்திறனாளி சேர்க்கை, போன்றவற்றை மையமாக வைத்து இந்த தரவரிசை மதிப்பீடு வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு உடுமலை அரசு கலைக் கல்லூரி 98வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் இந்த தரவரிசையில் 28 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள 5 அரசு கலைக்கல்லூரிகள் அனைத்துமே நகர்ப்புறங்களில் அமைந்துள்ளது.
கிராமப்புற இளைஞர்களின் வாழ்வை முன்னேற்றும் கிராமப்புற கல்லூரிகளில் உடுமலை அரசு கலைக் கல்லூரி முதலிடம் வகிக்கிறது. இக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். இந்த பேராசிரியர்களின் உறுதுணையோடு பலர் முனைவர் பட்டம் பெற்று வருகின்றனர். அது கல்லூரிக்கு பெருமை சேர்க்கிறது. ஏழை எளிய நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் இங்கு அதிகளவில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கி அவர்கள் வாழ்வில் முன்னேற இக்கல்லூரி பேராசிரியர்கள் பேருதவியாக திகழ்ந்து வருகின்றனர்.
அதேபோல, கல்லூரித் தேர்வுகளில் பல்கலைக்கழக அளவில் உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று வருகின்றனர். மேலும், இந்த தரவரிசை மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க உறுதுணையாக இருந்த முனைவர் H.B. ராமலிங்கம், முனைவர் கருணாநிதி, முனைவர் வெங்கடேஷ் ஆகியோருக்கு கல்லூரி பேராசிரியர் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
இக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கடின உழைப்பால் மேலும் சிறப்பு பெறும் அடுத்த ஆண்டு மேலும் இக்கல்லூரி முன்னேற்றப் பாதையில் செல்லும் என கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துக்கொண்டார்.