திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இழப்பீட்டுத் தொகையை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் வழங்கினார்.
கடந்த 2017-ம் ஆண்டு இரு சக்கர வாகனம் மற்றும் ஜேசிபி இயந்திரம் இரண்டும் மோதிக் கொண்ட விபத்தில் அரவிந்த் என்ற வாலிபர் கை, கால்கள் செயல் இழந்து வாய் பேச முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவருக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் 47 லட்சம் ரூபாய்க்கான இழப்பீட்டுத் தொகையை இன்று வழங்கினார்.
அதேபோல், திருப்பூரைச் சேர்ந்த விஜய கார்த்திக் என்ற காவலர் சென்னையில் பணியாற்றி வந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக விஜயகார்த்திக் குடும்பத்தினரிடம் இழப்பீட்டுத் தொகையாக 60 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இழப்பீட்டுத் தொகையை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் வழங்கினார்.
கடந்த 2017-ம் ஆண்டு இரு சக்கர வாகனம் மற்றும் ஜேசிபி இயந்திரம் இரண்டும் மோதிக் கொண்ட விபத்தில் அரவிந்த் என்ற வாலிபர் கை, கால்கள் செயல் இழந்து வாய் பேச முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவருக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் 47 லட்சம் ரூபாய்க்கான இழப்பீட்டுத் தொகையை இன்று வழங்கினார்.
அதேபோல், திருப்பூரைச் சேர்ந்த விஜய கார்த்திக் என்ற காவலர் சென்னையில் பணியாற்றி வந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக விஜயகார்த்திக் குடும்பத்தினரிடம் இழப்பீட்டுத் தொகையாக 60 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.