கோவை செம்மேடு அருகே, வெவ்வேறு சம்பவங்களில் 18 வயது நிறைவடையாத இரு சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்.
கோவை: கடந்த 3 நாள்களாக தொடர்ந்து முகூர்த்த நாட்களாக உள்ளதால்,எங்கு பார்த்தாலும் மண்டபங்களில், கோவில்களில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக தகவல் வந்தது. உடனே, அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று இரண்டு திருமணங்களை தடுத்து நிறுத்தினர்.
கோவை செம்மேடு அருகே 17 வயது சிறுமிக்கும், பாபு (23) என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடைந்தால் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினர்.
இதே போல, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சாந்தாமணி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
18 வயது நிறைவடையாத ஒரு பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்து வைப்பது"குழந்தை திருமணம் தடுப்பு சட்டம்- 2006'ன் படி குற்றம். அவ்வாறு, 18 வயது பூர்த்தியாகாத பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் வாலிபர்,, இத்திருமணத்தை நடத்திய அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.
கோவை செம்மேடு அருகே 17 வயது சிறுமிக்கும், பாபு (23) என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடைந்தால் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினர்.
இதே போல, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சாந்தாமணி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
18 வயது நிறைவடையாத ஒரு பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்து வைப்பது"குழந்தை திருமணம் தடுப்பு சட்டம்- 2006'ன் படி குற்றம். அவ்வாறு, 18 வயது பூர்த்தியாகாத பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் வாலிபர்,, இத்திருமணத்தை நடத்திய அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.